districts

கடலூர் இயற்கை துறைமுகத்தை விரிவுபடுத்த வேண்டும் முதல்வரிடம் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் கோரிக்கை

கடலூர், ஏப்.28-

   கடலூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்றான இயற்கை துறைமுகத்தை ஆழப் படுத்தி விரிவுப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியது.

   விழுப்புரம் வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சரிடம் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கடலூர் இயற்கை துறைமுகத்தை ஆழப்படுத்தி, விரிவுபடுத்தி, கப்பல் போக்குவரத்தை உருவாக்க வேண்டும் வேலைவாய்ப்பை உரு வாக்க ஒன்றிய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் வழியாக சென்னைக்கு கப்பல் போக்குவரத்து, பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க வேண்டும்.

சர்க்கரை ஆலையை  அரசே ஏற்க வேண்டும்

   மூடப்பட்ட அம்பிகா ஆரூரான் சர்க்கரை ஆலையை அரசு ஏற்று நடத்திட வேண்டும். அம்பிகா ஆருரான் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பெய ரில் வங்கிகளில் ஆலை நிர்வாகம் பெற்றுள்ள கடன்களை பைசல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கடலூரில் 2011 ஆம் ஆண்டில் அடிக்கல்  நாட்டிய அரசு மருத்துவக் கல்லூரி உடனடியாக துவக்க வேண் டும். அரசு சட்டக் கல்லூரி, மகளிர் கல் லூரி ஆகியவை ஏற்படுத்த வேண்டும்.

மழை வெள்ளத்திலிருந்து பாதுகாத்திட...

    மழை வெள்ள பாதிப்பில் இருந்து கடலூரை பாதுகாக்க கடலூரில் அனைத்து வார்டுகளிலும் வடிகால் வசதி, கெடிலம், பெண்ணையாறு ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும். வெள்ள காலங்களில் வரும் தண்ணீரை தேக்கி வைக்க, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, கெடிலம், பெண்ணையாறு, மணி முத்தாறு, கொள்ளிடம், வெள்ளாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளின் குறுக்கே 5 கி.மீட்டருக்கு ஒரு இடத்தில் தடுப்பணைகட்ட வேண்டும். அருவாமுக்குத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, கொண்டங்கி ஏரி, வெலிங்டன் ஏரியை முழுமையாக தூர்வார ஏற்பாடு செய்வது மட்டு மில்லாது அவற்றி சுற்றி உள்ள ஆக்ர மிப்புகளையும் அகற்ற வேண்டும்.

  சுற்றியுள்ள பல மாவட்டங்களின் வடிகால் மாவட்டமான கடலூர் மாவட் டம் தொடர்ந்து இயற்கை பேரிடர் பாதிக்கும் மாவட்டம் ஆகும். எனவே “நிரந்தர இயற்கை பேரிடர் மேலா ண்மை அமைப்பு” முறையை கடலூர் மாவட்டத்திற்கு என பிரத்யோகமாக உருவாக்க வேண்டும். நீர் வழித் தடங்கள் ஆக்கிர மிப்பு முற்றிலும் அகற்றப்பட்டு வடிகால் நீர் கடலில் கலப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  மாவட்டம் முழுவதும் ஆயிரக் கணக்கான வீடுகளில், பல பத்தாண்டு காலமாக குடியிருந்த மக்கள், நீர் நிலை ஆக்ரமிப்பாளர் கள் என்று  காரணம் காட்டி விரட்டப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகள் இடிக்கப்பட்டுள் ளது. அவர்களுக்கு உரிய மாற்று இடத்தை அரசு உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிசை  ல்லா மாவட்டமாக கடலூர் மாவட் டத்தை முழுமையாக மாற்ற ஐந்து லட்சம் செலவில் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

  கடலூர் மாநகரில் பெரும்பாலான மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. பாது காக் கப்பட்ட குடிநீரை காலை-மாலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நகரம் முழுவதும் உள்ள குடிநீர் குழாய்களை புதுப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சாக்கடை நீர் கலப்பை தடுத்த வேண்டும். விருதாச் சலம் செராமிக் சிறு குறு தொழில்களை பாதுகாக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

  கொள்ளிடம் ஆற்றின் வல்லபடுகை -கருப்பூர் -கஞ்சன்கொல்லை வரை சுமார் 30 கி.மீ. சாலை சேதம் அடை ந்து போக்குவரத்துக்கு பய னற்ற நிலையில் உள்ளது. இந்த கொள்ளி டம் கரை சாலையை சீரமைத்து தர நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்  இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.