கோவை, ஜூலை 1- போதைக்கு எதிரான போராட்டத் தில் உயிர் நீத்த கடலூர் குமார் ஆனந் தனின் நினைவாக, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடந்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் நிறைவு நிகழ்ச்சி கோவை எஸ்ஐ எச்எஸ் காலனியில் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் சங்க நிர்வாகிகள் குமார் ஆனந்தன், போதைப்பொருள் மற் றும் கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராடி வந்ததால் ஆத்திரமடைந்து 1999ம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி கள்ளச்சாரய குண்டர்களால் படு கொலை செய்யப்பட்டனர். வாலிபர் சங்க தியாகிகள் கடலூர் குமார், ஆனந்தன் நினைவாக ஆண் டுதோறும் வாலிபர் சங்கத்தினர் மாநி லம் முழுவதும் போதைக்கெதிரான பல்வேறு வடிவங்களில் இயக்கங் களை முன்னெடுத்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, கோவை, சிங்கை நகரக் குழு சார்பில் கடந்த 3 வாரங்களாக கடலூர் குமார், ஆனந் தன் நினைவு கிரிக்கெட் போட்டி கள் நடைபெற்றன. இதன் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வு எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதி யில் ஞாயிறன்று நடைபெற்றது. நிகழ்விற்கு, வாலிபர் சங்க சிங்கை நகரத் தலைவர் சனோஜ் தலைமை ஏற்றார். இதில், போட்டி யில், கலந்து கொண்டவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப் பட்டது. இதில், வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி, வாலிபர் சங்க மாவட்டத்தலைவர் விவேகா னந்தன், பொருளாளர் தினேஷ் ராஜ, சிங்கை நகரச் செயலாளர் மணி பாரதி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். முன்னதாக, போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.