அறந்தாங்கி, பிப்.28- கிரஷர் ஜல்லி எம்.சாண்ட், பி.சாண்ட் நூறு சதவீதம் திடீர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்தம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. கட்டிட பொறியாளர் சங்க தலைவர் சிராஜிதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசு ஒப்பந்தகாரர் ஆர்.ஆர்.கே. கலைமணி, லாரி உரிமையாளர் சங்க எஸ் சிவக்குமார், கட்டிடப் பொருள் விற்பனையாளர் சங்க அசோக்பாண்டியன், தமிழ்நாடு மின் அமைப்பாளர் சங்க ராஜா மற்றும் கட்டிடப் பொறியாளர் சங்கத்தினர், ஒப்பந்தக்காரர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டுநர்கள் சங்கம், கட்டிடப்பொருள் விற்பனையாளர்சங்கம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விலை உயர்வை குறைத்து, முறையான விலை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர், லாரி உரிமையாளர் சங்க தலைவர் கூறுகையில், தங்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை உயர்வால் அடித்தட்டு தொழிலாளர்கள், பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அனைத்து சங்கங்களின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.