districts

img

பேராவூரணியில் கிரிக்கெட் போட்டி: ரூ.1 லட்சம் பரிசு

தஞ்சாவூர், ஜூன் 14 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செருபாலக்காடு - கிழக்கு கிரா மத்தில் ஈகிள் ஸ்டார் நற்பணி விளையாட்டு குழுமம், கிராம மக்கள் சார்பில் அய்யனார் கோயில் திடலில் 10 ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.  பட்டுக்கோட்டை முன்னாள் நகர் மன்றத்  தலைவர் எஸ்.ஆர்.ஜவகர் பாபு, மருத்துவர்  எஸ்.ஆர். சந்திரசேகரன், தென்னங்குடி ராஜா, பேராவூரணி ஒன்றியப் பெருந்தலை வர் சசிகலா ரவிசங்கர்,  கறம்பக்காடு ஊராட்சி  மன்றத் தலைவர் கே.ஆர்.குகன், சேதுபாவா சத்திரம் செல்வக்கிளி, ஈகிள் ஸ்டார் குரூப் நண்பர்கள், செருபாலக்காடு கிழக்கு கிராமத் தினர் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டி யில், முதல் பரிசு ரூ.30 ஆயிரம் தில்லங்காடு  அணிக்கும், 2 ஆம் பரிசு ரூ.25 ஆயிரம் செரு பாலக்காடு ஈகிள் ஸ்டார் அணிக்கும், 3 ஆம்  பரிசு ரூ.20 ஆயிரம் செருபாலக்காடு எஸ்.டி.சி.சி  அணிக்கும், நான்காம் பரிசு ரூ.15 ஆயிரம் புதுப்பட்டினம் அணிக்கும், ஐந்தாம் பரிசு ரூ.10  ஆயிரம் நாடாகாடு அணிக்கும் வழங்கப்பட்டது.