மயிலாடுதுறை, செப்.5- மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் உள்ளிட்ட மக்கள் விரோதக் கொள்கை களைக் கண்டித்து செப்.7 அன்று நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெறு கின்றன. இதையொட்டி, டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 ஆவது நாளாக மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. சீர்காழி ஒன்றியம் பூம்புகார், தருமகுளம், திருவெண்காடு பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி.சிம்சன், வழக்கறிஞர் ஞான பிரகாசம் உள்ளிட்டோர் உரையாற்றினர். கொள்ளிடம் ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரியப்பன், டி.சிம்சன், ஒன்றியச் செயலாளர் கேசவன் உள்ளிட் டோர் உரையாற்றினர். தரங்கம்பாடி ஒன்றியம் பொறையார், காட்டுச்சேரி, ஆயப்பாடி, பூதனூர், இலுப்பூர் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரவிச்சந்தி ரன், கே.பி.மார்க்ஸ் மற்றும் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பேசினர். மயிலாடுதுறை, குத்தாலம் ஒன்றி யங்களிலும் பிரச்சார பயணம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் தீவிரப் பிரச்சாரம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 6 இடங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது. போராட் டத்தை விளக்கி செப்.1 முதல் மாவட்டத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து விளக்கப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இப்பிரச்சார இயக்கத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
தஞ்சாவூர்
ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சாவூர் பள்ளி யக்ரஹாரம் பகுதியில் தெருமுனை வாகனப் பிரச்சா ரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு மாநகரக் குழு உறுப்பினர் சி.ராஜன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் சிறப்பு ரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, என்.சரவணன், மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், எம்ஜிஆர் நகர் கிளைச் செயலாளர் புனிதா, பம்பிங் ஸ்டேஷன் கிளைச் செயலாளர் ஜெனிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
போராட்டத்தை விளக்கி திருவாரூர் ஒன்றியத் திற்குட்பட்ட புதூர் பகுதியில் செவ்வாயன்று இரு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பிரச்சாரம் திருவாரூர் நகர் பகுதியில் நிறைவு பெற்றது. பிரச்சார பயணத்தில் கட்சியின் ஒன்றிய, நகர குழு நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்ற னர்.
அரியலூர்
செப்.7 மறியல் போராட்டத்தை விளக்கி அரிய லூர் மாவட்டம் புதுச்சாவடி, கிராமத்தில் தப்பாட்ட இசைக்குழுவினருடன் பிரச்சாரம் துவங்கியது. ஆமணக்கந்தோண்டி, கடாரம்கொண்டான், உட் கோட்டை, வீரசோழபுரம், எக்ஸ் ரோடு, கங்கை கொண்ட சோழபுரம், இளையபெருமாநல்லூர், முத்துசேர்வாமடம், மீன்சுருட்டி, வெத்தியார்வெட்டு, சலுப்பை வழியாக சென்ற பிரச்சார பயணம் ஜெயங்கொண்டத்தில் நிறைவடைந்தது. பயணத்திற்கு ஒன்றியச் செயலாளர் வெங்க டாசலம் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பி னர்கள் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்டச் செயலா ளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமசிவம், ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கரூர் கட்சியின் க.பரமத்தி ஒன்றியக் குழு சார்பில் சின்னதாராபுரம் பேருந்து நிலையம் முன்பு தெரு முனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.முகமதுஅனிபா தலைமை வகித்தார். க.பரமத்தி கடைவீதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.கே. மணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் மா.ஜோதிபாசு மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பேசினர். மாவட்ட குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
நாகை: நாளை 9 இடங்களில் மறியல்
நாகப்பட்டினம், செப்.5 - ஒன்றிய அரசை கண்டித்து செப்டம் பர் 7 மறியல் போராட்டத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வு, வேலையிழப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 நாட்களாக மாவட்டம் முழுவதும் சிறப்பு பேரவைக் கூட்டம், தெரு முனைப் பிரச்சாரம், வீடுகள் தோறும் சென்று துண்டுப் பிரசுரம் கொடுத்தல், விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரம் என மறியல் போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்து மக்களிடம் விளக்கிப் பேசியுள்ளோம். இந்த மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நாகப்பட்டினம் மாவட்டத் தில் 9 இடங்களில் நடைபெறுகிறது. நாகப் பட்டினம் ரயில் நிலையத்தில் கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில் போராட்டம் நடை பெறுகிறது. கீழ்வேளூர் இந்தியன் வங்கி எதிரில் நாகை மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கீழையூர், வலிவலம், திருப்பூண்டி, தலைஞாயிறு, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தபால் நிலையங்களின் எதிரிலும், வேதாரண்யம் பாரத ஸ்டேட் வங்கி, காரியாபட்டினம் கனரா வங்கி ஆகிய வங்கிகளின் எதிரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது, இதில் மாவட்டம் முழுவதிலும் சுமார் 8000 பேரை பங்கெடுக்க வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலனை முன்னிறுத்தி நடை பெறும் இந்த மறியல் போராட்டத்திற்கு, அனைத்து தரப்பு மக்களும் ஒத்து ழைப்பு தர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.