districts

img

தோழர் எம்.பொன்னையன் மறைவு: சிபிஎம் அஞ்சலி

திருவாரூர், டிச.29 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் தேவர்கண்டநல்லூரில் வசித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எம்.பொன்னையன் வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 80. தோழர் எம்.பொன்னையன் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டமாக இருந்த போது மகத்தான  மக்கள் தலைவர்கள் பி.எஸ்.தனுஷ்கோடி, கோ.வீரையன் மற்றும் நன்னிலம் வட்டச் செயலாளராக செயல்பட்ட காவாலக்குடி  எம்.சண்முகம் மற்றும் குளிக்கரை ஜி.பழனி வேலு உள்ளிட்ட பல்வேறு தோழர்களுடன் இணைந்து பணியாற்றியவர். வயது முதிர்ந்த நிலையிலும் சிங்க ளாஞ்சேரி ரயில்வே கேட் அருகில் உள்ள கொடிமேடையில் அமர்ந்து எப்போதும் தீக்கதிர் பத்திரிக்கையை வாசிக்கும் பழக்கம் உள்ள வர். கட்சியின் கொரடாச் சேரி ஒன்றியக் குழு உறுப்பி னராகவும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின்  ஒன்றியச் செயலாளராக வும், பெருந்திரக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சில ராகவும் செயல்பட்டவர். அன்னாரது உடல், அவரின் இல்லத்தில் அஞ்ச லிக்காக வைக்கப்பட்ட இருந்தது. தகவலறிந்து சென்ற சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச்  செயலாளர் டி.முருகையன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், தலைவர் எஸ்.தம்புசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா.கோமதி ஆகி யோர் அஞ்சலி செலுத்தினர். மூத்த தோழர் என்.இடும்பையன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சீனிவாசன், திருவாரூர் ஒன்றியச் செயலாளர் பி.ஆர். எஸ்.சுந்தரய்யா, கொரடாச்சேரி ஒன்றியச்  செயலாளர் எம்.கோபிராஜ், ஒன்றியம் மற்றும்  கிளை உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.