திருவாரூர், ஜன.29 - திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி கௌ ரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் உரையாற்றினார். திரு.வி.க அரசு அறிவி யல் கலைக் கல்லூரியில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 150- க்கும் மேற்பட்ட விரிவுரை யாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 103 கௌரவ விரிவுரை யாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்பு களை புறக்கணித்து, காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாளாக ஈடுபட்டுள்ள னர். தேர்தல் வாக்குறுதிப் படி, தமிழ்நாடு அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை நீதிமன்ற ஆணைப் படி ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும். பெண் கௌரவ விரிவுரையா ளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட் டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆதரவு ஆசிரியர்களின் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆயிரக்கணக் கானோர் வகுப்புகளை புறக் கணித்து கல்லூரி வளாகத்தி லேயே கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஜன.28 அன்று ஈடுபட்ட னர். இந்நிலையில், தொ டர்ந்து உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரையா ளர்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் திரு.வி.க அரசு கலை அறிவியல் கல்லூரி யில் நேரில் சந்தித்து போராட் டத்தின் தன்மை குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உரை யாற்றினார். அப்போது அவர், “கௌரவ விரிவுரையா ளர்களின் நியாயமான கோரிக் கைகளை அரசு உடனடி யாக நிறைவேற்றித் தர வேண்டும். இந்திய மாணவர் சங்கம் கௌரவ விரிவுரை யாளர்களுக்கு ஆதரவாக நின்று போராட்டத்தை ஒவ்வொரு அரசு கல்லூரி களிலும் முன்னெடுக்கும்” என்றார்.