districts

img

மக்களுக்கு எதிராக செயல்படும் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல்

புதுக்கோட்டை, அக்.10 - சாமானிய மக்களுக்கு எதிராக வும், குற்றவாளிகளுக்கு ஆதரவா கவும் செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க  உயர் அதிகாரிகள் உறுதியளித்துள் ளனர். இது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவி ப்புக்கு கிடைத்த வெற்றி ஆகும்.  புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மின்னாத்தூர் அருகே ராமுடையான்பட்டி கிரா மத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கடந்த மாதம் 13 ஆம் தேதி கந்தர்வ கோட்டையில் உள்ள மண்டபத் தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி க்கு சென்று இவர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்போது அங்கு வந்த மின்னாத் தூரைச் சேர்ந்த தங்கச்சாமி என்பவர் “பள்ளப் பயலுக்கு இவ்வ ளவு திமிரா? நாங்கள் வரும்பொ ழுது நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் அளவுக்கு உனக்கு தைரி யம் வந்துவிட்டதா? என சாதியைச் சொல்லி மிகவும் தரக்குறைவாக திட்டிய உள்ளார். மேலும், அவரது  கழுத்தில் துண்டை போட்டு முறுக்கி  கன்னத்தில் அறைந்துள்ளார். அரு கில் இருந்த நரகங்கிப்பட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ராஜ்குமார் ஆகிய இருவரும் இச்செயலை ஊக்கப்படுத்தியுள்ளனர்.  

இதுகுறித்து, கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத் தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும், காவல் ஆய்வா ளர் செந்தில்மாறன் “ஊரில் பெரிய  மனிதர்கள் மீது புகார் கொடுக் கும் அளவுக்கு உனக்கு திமிரா”  எனத் திட்டி எனது செல்போனை யும் பிடுங்கி வைத்துக் கொண்டதாக வும், சுமார் இரண்டு மணிநேரம் காக்கவைத்து நாகூசும் தகாத  வார்த்தைகளால் திட்டி காவல்நிலை யத்திலிருந்து அனுப்பி வைத்தாக வும் செல்வராஜ் கூறுகிறார்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொ டுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து சாமா னிய மக்களுக்கு எதிராகவும் குற்ற வாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சனிக்கிழமை கந்தர்வ கோட்டையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்துவது என திட்டமிட்டு  துண்டு பிரசுரமும் வெளியிடப்பட்டது.  போராட்டத்திற்கு தயாரான நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருமாறு காவல்துறை யினர் சார்பில் தொடர்ந்து வலியு றுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இப்பேச் சுவார்த்தையில், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், புதுக்கோட்டை நகர  காவல் ஆய்வாளர் குருநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள்,   ஒன்றிய செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  பேச்சுவார்த்தையில் சாதிய வன்கொடுமை நிகழ்த்திய குற்ற வாளிகள் மீது முறையாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது  எனவும், சாமானிய மக்களுக்கு எதிராகவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல் பட்டு வரும் கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் மீது விசாரணை நடத்தி துறை ரீதி யான நடவடிக்கை எடுப்பது என வும் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சார்பில் துணை கண்காணிப் பாளர் லில்லி கிரேஸ் தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து போராட் டத்தில் கூடி இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தையின் முடிவு களை விளக்கி மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், பேச்சு வார்த்தையில் நமது கோரிக்கை களை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த பேச்சு வார்த்தை நம்முடைய போராட்டத் திற்கு கிடைத்த வெற்றி ஆகும். காவல்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டபடி குற்றவாளிகள் மீதும்,  அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். அவ்வாறு நடவடிக்கை எடுக்கத்  தவறும் பட்சத்தில் போராட் டத்தை மீண்டும் தீவிரமாக முன்னெ டுப்போம் என தெரிவித்தார். இத னையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.