புதுக்கோட்டை, ஜன.12 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை நகராட்சிப் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலி யுறுத்தி செவ்வாய்க்கிழமை கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. மாவட்ட தலைமை மருத்துவ மனையாக செயல்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மருத்துவமனையை மீண்டும் நகராட்சி மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும். சித்தா மற்றும் ஹோமியோபதி பிரிவுகளுக்கான பணியிடங்களை அதிகப் படுத்தி உள்நோயாளிகள் பிரிவு தொடங்க வேண்டும். புதுக்கோட்டை நகரம் முழுவ தும் கொசு மருந்து அடிக்க வேண்டும் பாதாள சாக்கடைகளை சீரமைத்து புதிதாக இணைக் கப்பட்ட பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும். தோரண வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை உத்தர வாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கை யெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்திற்கு கட்சியின் நகர செயலாளர் ஆர்.சோலையப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. நாகராஜன், மாவட்ட குழு உறுப்பினர் காயத்ரி, நகரக் குழு உறுப்பினர்கள் சி.அடைக்கல சாமி, பழ.குமரேசன், எஸ்.பாண்டியன், எம். கணேஷ், ஆ.டேவிட் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.