திருவாரூர், நவ.25- திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சி 10 ஆவது வார்டு ஸ்டாலின் நகரில் சிபிஎம் புதிய கிளை கள் அமைப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் எம்.ஈஸ்வரன் தலைமை வகித்தார். கூட்டத் தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் துணைக் குழு கார்டு வழங்கி சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் சிபிஎம் பெண் கள் புதிய கிளைக்கு செயலா ளராக எஸ்.மைதிலி, சிபிஎம் ஆண்கள் புதிய கிளைக்கு செயலாளராக எஸ். திரு முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்வில் சிபிஎம் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம். அம்பேத்கர், விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் டி.ஏ. சரவணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.லெனின், சிபிஎம் நகரக் குழு என்.நீதிராஜன், மாதர் சங்கத்தின் நகரக்குழு கா.ஈஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஸ்டாலின் நகர் மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த பொது பாதையை வேலி அமைத்து தடுத்ததை, குடியிருப்ப வர்களின் கோரிக்கையை ஏற்று பொதுப்பாதையை மீட்டு தந்து நிரந்தரமாக சாலை அமைக்கும் வகை யில் பாதை ஏற்பாடு செய்து கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் நகர செயலாளர் டி.ஜி. சேகர், நகரக்குழு, மாதர் சங்கத்தின் தோழர் கள் உள்ளிட்ட அனைவருக் கும் ஸ்டாலின் நகர பகுதி மக் கள் நன்றி தெரிவித்தனர்.