districts

img

சிபிஎம் மூத்த தோழர் வி.காத்தமுத்து காலமானார்

திருவாரூர், செப்.23 - திருவாரூர் மாவட்டம் கோட்டூர்  ஒன்றியம் பாலையூர் கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தோழர் வி.காத்தமுத்து வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக் கிழமை காலமானார். இவர் திருவாரூர்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி தந்தை ஆவார். அவரது மறைவு செய்தி அறிந்த கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர், தோழர் காத்தமுத்துவின் உடலுக்கு மலர்  மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, சிஐ டியு மாவட்டச் செயலாளர் டி.முருகை யன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர்  பி.கோமதி மற்றும் மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள், கோட்டூர் ஒன்றிய செயலாளர் எல்.சண்முகவேல், திருத்து றைப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலா ளர் டி.வி.காரல் மார்க்ஸ் உள்ளிட்ட பலர்  அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்வு திங்களன்று நடைபெற்றது.