districts

img

பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி சிபிஎம் சாலை மறியல்

குடவாசல், ஜூன் 16-  வலங்கைமான் ஒன்றியம் களத்தூர் ஊராட்சியில் பொதுமக்களின் அடிப் படை தேவைகளை நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் புதனன்று சாலை மறியல் நடைபெற்றது.  மறியலுக்கு கிளை செயலாளர் பி.எம்.கணேசன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.இளங்கோவன் மற்றும் கிளை உறுப்பி னர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். களத்தூர் ஊராட்சியில் உள்ள நெப்புகோவில், வெள்ளமங்கலம், களத்தூர் வடக்குத்தெரு உள்ளிட்ட இடங்களில் மிக,மிக மோசமான முறையில் பழுதடைந்துள்ள கிராம சாலைகளை புதிதாக போட வேண்டும், களத்தூர் வடக்குத்தெரு மயானத்திற்கு செல்லும் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும், நெப்பு கோவில் ஆதிதிராவிட தெருவில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவி களின் சிரமங்களை போக்க கும்ப கோணத்திலிருந்து அம்மாபேட்டை வரை ஆறு முறை பேருந்தை இயக்க வேண்டும்,பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது.

எழுத்துப்பூர்வ உறுதிமொழி
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெருமாள், ஒன்றியச் செய லாளர் என்.இராதா உள்ளிட்டோருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைத்து கோரிக்கைகளும் 15 நாளில் நிறைவேற்றவதாக எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.