districts

img

கோவை காவல்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜன.31 - மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி கோவையில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடத்திய உறுமொழி நிகழ்ச்சியில் ‘காந்தியை கொன்றது கோட்சே என கூறக்கூடாது’ என குறுக்கீடு செய்த கோவை காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் தே.துரைக்கண்ணு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், ஒன்றிய செயலாளர்கள் சி.விஜயகாந்த், டிஜி.ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.