தஞ்சாவூர், அக்.15 - தில்லியில் நியூஸ் கிளிக் ஊடகத்தின் மீதான ஒன்றிய மோடி அரசின் தாக்குதலை கண்டித்தும், பத்திரிக்கை ஆசிரியர், நிர்வாகிகளை தில்லி காவல்துறை கைது செய்ததைக் கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சானூரப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் தமி ழரசன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் சி.பாஸ்கர் கண்டன உரை யாற்றினார். ஒன்றியக்குழு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, மக்கள் ஒற்றுமை மேடை கலைக்குழுவின் பிரச்சாரம் நடை பெற்றது.