districts

img

ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்தும் ஜனநாயக மாதர் சங்கம்-உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் (சிஐடியு) குழு சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா.கோமதி, மாவட்டக் கன்வீனர் இரா.மாலதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர்  கே.என்.அனிபா, மாவட்டத் துணைத் தலைவர் ஜோதிபாசு. மாவட்டச் செயலாளர் டி.முருகையன், திருவாரூர் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், வெங்கடேசன், கே.கஜேந்திரன்,  ஜி.ரகுபதி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் பவானி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.