ஒரத்தநாடு, ஜூன்.20 - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழ மை நடைபெற்ற, “உங்க ளைத் தேடி உங்கள் ஊரில், “ திட்டம் ஆய்வுப்பணிக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வந்திருந்தார். அங்கு ஆட்சியரிடம், ஒரத்த நாடு பகுதியில் பொதுமக்க ளுக்கு இடையூறாக இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ் குமார், ஒரத்தநாடு ஒன்றி யச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கை மனு அளித்த னர். அந்த மனுவில் கூறி யிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மன் னார்குடி முக்கம் பிரிவு சாலையில், பொதுமக்களு க்கும், மாணவ, மாணவிகளு க்கும் இடையூறாக, மிக மோ சமான நிலையில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மது பானக் கடையை அடைத்து பூட்டுப் போடும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பி னர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக கடந்த 27.03.2023 அன்று காலை 11 மணியளவில் ஒரத்தநாடு வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஒரு மாத காலத்தில் மதுக் கடையை அகற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. தற்போது ஒரு வருடம் முடிந்தும் இதுவரை டாஸ் மாக் கடை அகற்றப்பட வில்லை. எனவே, உடனடியாக ஏற்கனவே கொடுக்கப்பட்ட உறுதிமொழியை அமல் படுத்தும் வகையில் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.