districts

img

மாணவர்கள் கைதுக்கு சிபிஎம் எதிர்ப்பு ...

பேராசிரியர் நியமன முறைகேட்டை கண்டித்து அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்த சென்ற மாணவர்களை காவல் துறையினர் அராஜகமாக கைது செய்தனர். இதனை கண்டித்து செவ்வாயன்று (ஆக.21) கோட்டூர் மார்க்கெட்டில் சிபிஎம் சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. சைதாப்பேட்டை பகுதி குழு உறுப்பினர் வெ.கவிதா தலைமையில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ச.லெனின், டி.சுந்தர், பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர் ரா.பாரதி, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஆனந்தகுமார், சிபிஎம் கோட்டூர்புரம் கிளைச் செயலாளர் ஆ.பிரகாஷ், பிரியா உள்ளிட்டோர் பேசினர்.