நாகப்பட்டினம், ஜூன் 2-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றியம் மற்றும் கீழையூர் மேற்கு ஒன்றியத் தில் கட்சி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபூபக்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து கட்சி உறுப்பினர்களுக்கான அட்டை களை வழங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் சிறப்புரையாற்றி னார்.
கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற பேரவையில் மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.நாகைமாலி கட்சி உறுப்பினருக்கான அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வுகளில், மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.