districts

img

சிபிஎம் மயிலாடுதுறை மாவட்ட 24 ஆவது மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது

மயிலாடுதுறை, டிச.13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மயிலாடுதுறை மாவட்ட 24 ஆவது மாநாடு வெள்ளியன்று கொட்டும் தொடர் அதி கனமழையிலும் எழுச்சி யோடு வெள்ளியன்று துவங்கியது. தலைமைக் குழு தேர்வுக்கு பின்  கட்சியின் மாநாட்டு கொடியை மூத்த  தோழர் டி.கணேசன் ஏற்றி வைத்தார்.  அஞ்சலி தீர்மானத்தை ப.மாரியப்பன் முன் மொழிந்தார். மாநாட்டின் வர வேற்புக் குழு செயலாளர் டி.ஜி.ரவிச்சந்திரன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பால பாரதி உரையாற்றினார்.  அரசியல், ஸ்தாபன வேலைய றிக்கையை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ் வாசித் தார். மாநாட்டில் கட்சியின் மூத்த தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாநாட்டிற்கு முன்னதாக, காம ராஜர் சாலையிலுள்ள தோழர் கோ.பாரதிமோகன் நினைவகத்தி லிருந்து மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கே.சாமுவேல்ராஜ், கே.பால பாரதி, மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஏ.வி.சிங்கார வேலன், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, ஒன்றியச் செயலா ளர்கள், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், செந்தொண்டர்கள் அணிவகுப் போடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் செங்கொடி களை ஏந்தியவாறு காம்ரேட் கலைக்குழுவின் பறையிசையோடு பேரணி நடைபெற்றது. கனமழையையும் பொருட்படுத்தா மல் கம்பீர நடையுடன் நீதிமன்ற சாலை, திருவாரூர் சாலை, பெரியார் சிலை கேணிக்கரை வழியாக மாநாடு  நடைபெறும் அரங்கிற்கு வந்தடைந்த னர். குத்தாலம் மேற்கு ஒன்றியத்தி லிருந்து காஞ்சிவாய் தோழர்கள் சம்பா ராமசாமி, நல்லக்கண்ணு நினைவு கொடிப்பயணம், செம்பனார் கோவில் ஒன்றியம், அப்பராசப்புத்தூரி லிருந்து கொடி மரப் பயணம், தரங்கம்பாடி ஒன்றியம், திருமெய்ஞா னம் தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுடர் பயணம், மயிலாடுதுறை ஒன்றி யம், ஆனந்த தாண்டவபுரத்திலிருந்து தோழர் கே.சின்னையன் நினைவு கொடி கயிறு பயணம், மயிலாடுதுறை நகரம், கூறைநாடு பகுதியிலிருந்து தோழர் ஆர்.ஜி.சீனிவாசன் நினைவு ஜோதி பயணம் ஆகியவற்றை பெற்றுக்  கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரி யாதை செய்யும் நிகழ்ச்சிகள் நடை பெற்றன.