districts

img

கரூரில் சாதி மறுப்பு திருமணம்: பெற்றோரை ஏற்கச் செய்த சிபிஎம் தலைவர்கள்

கரூர், ஜூலை 9 -  கரூர் மாவட்டம் பவித்திரம் கிராமத்தைச்  சேர்ந்தவர் கண்மணி. கரூர் கருப்பாயி கோவில் தெருவைச் சார்ந்தவர் சூரியா. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்த வர்கள். இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காத லித்து வந்துள்ளனர். திங்கள்கிழமை கரூர்  மாவட்டம், மண்மங்கலத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்டக் குழு அலுவலகத்திற்கு  வந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டு மென கோரிக்கை விடுத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியில், தம்பதியரின் இரு குடும்பத்தின ரையும் அழைத்துப் பேசி, இந்த திரு மணத்தை ஏற்றுக் கொள்ள வைத்தனர்.  இந்நிலையில், மாதர் சங்க கரூர் மாவட்ட  பேரவைக் கூட்டத்திற்கு வந்திருந்த மாநிலப் பொருளாளர் பிரமிளா, மாநிலச் செயலாளர் லட்சுமி ஆகியோர் தலைமையில் மண மக்களை மாலை மாற்றச் செய்து வாழ்த்தினர். கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஜீவானந்தம், சி.முருகேசன், கரூர்  மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி, புகளூர் நகராட்சி மன்ற உறுப்பினர் அ.இந்து மதி, மாதர் சங்க நிர்வாகிகள் சுமதி, சசிகலா,  சிஐடியு மாவட்டப் பொருளாளர் ப.சரவணன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.