கரூர், டிச. 27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட 9ஆவது மாவட்ட மாநாடு தரகம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை துவங்கி, திங்கள்கிழமை மாலை யில் நிறைவடைந்தது. தரகம்பட்டி கடைவீதியில் செந் தொண்டர் பேரணியுடன் துவங்கிய மாநாட்டிற்கு ஜி.ஜீவானந்தம், இரா.முத்துசெல்வன், சுதா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.சக்திவேல் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்பு குழுத்தலைவர் பி.ராமமூர்த்தி வரவேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனக ராஜ் மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். மாவட்ட செயலாளர் கே. கந்தசாமி வேலை அறிக்கையையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவா னந்தம் வரவு- செலவு அறிக்கையையும் முன்வைத்து பேசினர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.ஜோதிபாசு, வர வேற்புக் குழு பொருளாளர் பி.வேல் முருகன் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர். கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். வரவேற்புக் குழு செயலாளர் பி.பழனிவேல் நன்றி கூறினார். பருத்தி பதுக்கலை தடுத்து நூல் விலையை குறைக்கவும், ஜவுளி ஏற்று மதி தொழிலை பாதுகாக்கவும் ஒன்றிய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாநகர போக்குவரத்து நெரி சலை போக்குவதற்கு உடனடியாக புதிய புறநகர் பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பஞ்சப் பட்டி ஏரி, தாந்தோணி ஒன்றியம் வெள்ளி யணை குளத்திற்கு காவிரியில் இருந்து பெரிய குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணாபுரம் ஒன்றியம் கோவக் குளம் அரசு மருத்துவமனை 24 மணி நேர மும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரவக்குறிச்சி முருங்கை விளை பொருட்கள் மதிப்பு கூட்டு ஆலை, கலைக்கல்லூரி, புதிய பேருந்து நிலையம் அமைத்திட வேண்டும். குளித்தலை நகரத்தில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள குளித்தலையில் உள்ள அரசு மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும். இனுங்கூரில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். குளித்தலை ஒன்றி யம் மருதூர், வதியம், கே. பேட்டை ஆகிய பகுதிகளில் மணல் குவாரி அமைக்கும் பணியை தமிழக அரசு கை விட வேண்டும். உள்ளூர் கட்டுமான தேவைக்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். கரூர் ஒன்றியம் மரவாபாளை யம்கிராமத்திற்கு ரயில்வே குகைவழிப் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
வளர்ச்சி நிதி வழங்கல்
மாநாட்டில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கா.கந்தசாமி - கே.தன லெட்சுமி ஆகியோர், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயி ரத்தை வழங்கினர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந் தம், கே.சக்திவேல், சி.முருகேசன், இரா. முத்துச்செல்வன், பி.ராமமூர்த்தி ஆகி யோர் உடனிருந்தனர்.