பெரம்பலூர், அக்.6 - பெரம்பலூர் நகரில் தங்கு தடை யின்றி அனைத்துப் பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர மாநாடு வலியுறுத்தியுள்ளது. கட்சியின் பெரம்பலூர் அலுவல கத்தில் ஞாயிறன்று நடைபெற்ற பெரம்ப லூர் நகர 2 ஆவது மாநாட்டிற்கு, நகர கமிட்டி உறுப்பினர் ரெங்கராஜ் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளருமான சாமி.நடராஜன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, ரெங்கநாதன், கலையரசி ஆகியோர் பேசினர். நகர் பகுதி மக்களுக்கு, 21 வார்டுகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் தடையின்றி கிடைக்க வேண்டும். பெரம்பலூர் நகர் பகுதியில் இலவச கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். பெரம்பலூரில் புறநகர் காவல் நிலை யம் அமைக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். நகரம் முழுவ தும் நடக்கும் வழிப்பறி சம்பவங்களை கண்காணிக்கும் பொருட்டு சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.