districts

img

சமுதாயக் கூடத்தை சரி செய்திடுக! திருப்பனந்தாளில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜன.21 - தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் கடைவீதி யில் காட்சிப் பொருளாக உள்ள கழிவறையை சீர மைத்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு திறந்து விட வேண்டும். பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்தை சரி செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திருப்பனந்தாள் பகுதியில் உள்ள அனைத்து தெருக்க ளிலும் தினமும் துப்புரவு பணி யாளர்கள் துப்புரவு பணி செய்திட வேண்டும். அனைத்து தெருக்க ளிலும் உள்ள சாலைகளை செப்பனிட்டு புதிய தார்ச் சாலை அமைத்துத் தர  வேண்டும். மழைக்காலங்க ளில் கடைவீதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பனந் தாள் பேரூராட்சி அலுவல கம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந் திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை  மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவ ட்டக் குழு உறுப்பினர்கள் ஜீவபாரதி, சாமிகண்ணு, பாரதி, ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் பேரூ ராட்சியை கண்டித்து முழக் கங்களை எழுப்பினர்.  இறுதியாக திருப்ப னந்தாள் செயல் அலுவலர்  போராட்டக் குழுவினரிடம்  அனைத்து கோரிக்கைகளை யும் உடனடியாக நிறை வேற்ற ஆவன செய்வதாக வும் கடைத் தருவில் உள்ள  கழிப்பறை வரும் வெள்ளிக் கிழமைக்குள் செப்பனிட்டு திறந்து விடப்படும் எனவும் உறுதியளித்தார்.