தஞ்சாவூர், அக்.21 - பாலஸ்தீனம் மீது போர் தொடுக்கும் இஸ்ரேலை கண்டித்து, ‘பாலஸ் தீனத்தை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் தஞ்சா வூர் ரயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு சார்பில் வெள்ளி யன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட் டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித் தார். மத்தியக் குழு உறுப் பினர்கள் பி.சம்பத், உ. வாசுகி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் தோழமை இயக்கத்தினர் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சனிக் கிழமை திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி செய லாளர் லெனின் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் அன்வர், பாலக்கரை பகுதி செயலாளர் சுரேஷ் ஆகி யோர் கண்டன உரையாற்றி னர்.