மன்னார்குடி, ஆக. 14- சுத்தமான குடிநீர், வடிகால் வசதி, பொதுக் கழிப்பறை வசதி வேண்டுமெனக் கோரி வாஞ்சியூர் கிராம மக்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் ராமாபுரம் பஞ்சா யத்திற்குட்பட்ட வாஞ்சியூர் கிராமத்தின் மக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் கே.ஜெயபால் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாக ராஜன் கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இக்கிரா மத்தில் ஏராளமான குடும்பங்கள் குடிமனைப் பட்டா இன்றி 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். வாஞ்சியூர் கிராமம், மன்னார்குடி நகரத்தையொட்டி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பகுதி. பாதுகாக்கப் பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும். தெருக்களில் மழை நீர் தேங்காமல் வடிகால் வசதி செய்து தர வேண்டும். தற்போது கட்டி வரும் பொது கழிப்பறை போதுமானதாக இருக்காது. அதை தேவையான அளவில் விரிவுபடுத்தி கட்ட வேண்டும். தேவங்குடி-திருவாரூர்-மன்னார்குடியை இணைக்கும் அந்த முக்கூட்டு பகுதியில் அடிக்கடி நிகழும் விபத்துகள், தடுமாற்றங் களை தவிர்க்க ரவுண்டானா அமைப்பது மிகவும் அவசியம். நூறு நாள் வேலையை அனைவருக்கும் வழங்குவதுடன் சட்டக் கூலி ரூ.319-ஐ குறைக்காமல் கொடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவ தில் அதிகாரிகள் இனியும் அலட்சியம் காட்டக் கூடாது. போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.தமிழ்மணி, நகரச் செயலாளர் ஜி.தாயு மானவன், சிஐடியு நிர்வாகிகள் பி.இளங்கோ வன், டி.ஜெகதீசன், கிளைச் செயலாளர் யு. கவியரசு உள்ளிட்டோர் பேசினர்.