districts

சிபிஎம் செங்கொடிகளை சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

கும்பகோணம்,  மார்ச் 29 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது தமிழ் மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதையொட்டி விளம்பரம் செய்யப்பட்டு செங்கொடிகள் ஏற்றப்பட்டன. மாநில மாநாட்டை யொட்டி தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் பகுதியில் 5 மையங் களில் 23 சிபிஎம் செங்கொடி களை ஏற்றி மாநாட்டு விளம் பரங்களை செய்து வைத்துள் ளனர். இந்நிலையில் கடந்த 4  நாட்களுக்கு முன்பு கும்ப கோணத்தை அடுத்த நாச்சியார்கோயிலில் பொது மக்களுக்கு எவ்வித இடையூ றும் இல்லாமல் நாச்சியார் கோயில் திருக்குளக்கரை கிழக்குப் பகுதியில் ஓரமாக  23 சிபிஎம் செங்கொடிகளை ஏற்றி மாநாட்டு விளம்பர  போர்டு வைக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் திங்கட்கி ழமை இரவு சமூக விரோதி கள் விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த செங் கொடிகளை பிடுங்கி அருகில்  உள்ள குளத்தில் வீசிவிட்டு, விளம்பர பேனர்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனை அறிந்த சிபிஎம்  தெற்கு ஒன்றிய செயலா ளர் பழனிவேல் நாச்சியார் கோயில் காவல்நிலையத் தில், நடவடிக்கை எடுக்க  கோரி புகார் அளித்தார். புகா ரின்பேரில் நாச்சியார்கோ யில் காவல் ஆய்வாளர் ரேகா ராணி புகாரை பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்.

;