districts

பாதியில் நிற்கும் பணிகளை முடிக்க நிதி ஒதுக்குக!

கரூர், அக்.16 - கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி  ஒன்றியக் குழு கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட வூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஒன்றி யக் குழு கவுன்சிலர்கள், அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.  மாவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட 11  ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கவுன்சிலர்  பி.ராமமூர்த்தி, தனது வார்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் அங்கன்வாடி மையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மழை நீர் வடிகால் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதியிலேயே நிறுத்தப் பட்டுள்ளன. மேலும் உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார். பின்னர் கவுன்சிலர் பி.ராமமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் செல்வராஜி டம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறி யிருப்பதாவது: கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி  ஒன்றியம், மாவத்தூர் ஊராட்சிக்குட் பட்ட ரெட்டியபட்டியில் 250 மீட்டர் நீளம்  கொண்ட மழைநீர் வடிகால் கால்வாய்  அமைக்க ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து  ஊராட்சி ஒன்றிய குழுவில் நிதி வழங்கப் பட்டது. ஆனால் இந்த ரூ.5 லட்சத்தில் 100 மீட்டர் மட்டுமே மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க முடியும், மீதமுள்ள  150 மீட்டர் நீளத்திற்கு வடிகால் கால்வாய்  அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யாத தால் பணிகளை துவக்க முடியாமல் உள்ளது. உடனடியாக மீதமுள்ள 150 மீட்டர்  நீளத்திற்கு உரிய நிதியை ஒன்றிய குழு ஒதுக்கிட வேண்டும்.  நாச்சிப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மைய புதிய  கட்டிடம் கட்டுவதற்கு ரூ.15 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் மகாத்மா  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்  ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள ரூ. 6 லட்சம் ஒன்றிய பொது  நிதியிலிருந்து வழங்க வேண்டும்.  மசலூர் தெற்கு பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 2022- 2023 ஆம் ஆண்டு 15 வது மானிய நிதி குழுவின் மூலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீரை உந்தி செல்வ தற்கு பைப்லைன் அமைக்க நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்க  தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்கு பைப்லைன் 1500 மீட்டர் நீளம் வரை  தேவைப்படுகிறது. இதற்கான நிதியை ஒன்றிய பொது நிதியிலிருந்து வழங்க வேண்டும்.  பொதுமக்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய குழு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை விரைந்து முடித்திட, ஊராட்சி ஒன்றியக் குழு நிர்வாகம் நிதியை  தாமதமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.