கரூர் பேருந்து நிலையத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி மாநகராட்சி கூட்டத்தில் சிபிஎம் கவுன்சிலர் குற்றச்சாட்டு
கரூர்,பிப்.1- கரூர் மாநகராட்சியின் சாதாரணக்கூட்டம் மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைமேயர் தாரணி சரவணன், ஆணையர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் எம்.தண்டபாணி பேசுகையில், கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கட்டிடம் இடிக்கப்பட்டதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் வெயிலில் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பயணிகள் நிற்கும் வகையில் நிழற்குடையை உடனே அமைக்க வேண்டும் என்றார். அதற்கு ஆணையர் சுதா, இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கரூர் பாலம்மாள்புரத்தில் உள்ள ஆட்டிறைச்சி வதைக்கூடம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. ஆனால் ஆட்டிறைச்சி வதைக்கூடத்திற்கு டெண்டர் விடப்பட்டு, கடைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறதே என்று அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மாநகராட்சி மேயர் கவிதாகணேசன், டெண்டர் விடுவதற்கான அதிகா ரம் படைத்தவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என்றார். கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
பதுக்கிய பட்டாசு வேதிப் பொருள் வெடித்து தொழிலாளி பலி
விருதுநகர், பிப்.01- விருதுநகர் அருகே உள்ள பாவாலியைச் சேர்ந்தவர் செல்வம்.இவரது வீட்டில் கடந்த வாரம்( ஜனவரி 25அன்று) முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் அதே ஊரைச் சேர்ந்த சின்ன ராஜ்(30) என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது கம்பிகளை சிறிய இயந்திரம் மூலம் வெட்டியுள்ளார். அப்போது ஏற்பட்ட தீப்பொறியானது, வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுக்கான வேதிப் பொருட்களின்மேல் விழுந்துள்ளது. இந்த விபத்தில் சின்னராஜ் பலியானார்.
விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றிய ஒன்றிய நிதிநிலை அறிக்கை விவசாயிகள் சங்கம் கடும் விமர்சனம்
தஞ்சாவூர், பிப்.1 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில், ஒன்றிய நிதியமைச்சரால் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றும் வெற்று அறிக்கை யாகவே உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் என்பதால் விவசாயிகளிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முற்றிலுமாக ஏமாற்றம் தருவதாகவே உள்ளது. விவசாய விளை பொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் குழு பரிந்துரை செய்துள்ள அடிப்படையில், ஏற்கனவே ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டபடிகுறைந்த பட்ச ஆதார விலையை சட்டமாக்கும் என்ற எதிர்பார்ப்பு நடக்கவில்லை. விவசாய இடுபொருட்கள், உரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை குறைப்பு அறிவிப்பும் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், முற்றிலு மாக இல்லை. நீண்ட காலமாக கடன் சுமையால் தவிக்கும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிப்பும் எதிர்பார்ப்பும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. விவசாயிகள் துயர் துடைக்க ஏற்கனவே நடைமுறையில் இருந்தது போல், பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்தும் என்ற எதிர் பார்ப்பும் அறிவிப்பில் இல்லை. தேர்தல் நேரத்தில் வெளிவருகிற பட்ஜெட் நிச்சயமாக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் பட்ஜெட்டாக இருக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
திருமானூரில் மானியத்தில் விதைகள் வழங்கல்
அரியலூர், பிப்.1- அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டார விவ சாயிகளை ஊக்குவிக்கும் விதமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ 400 அல்லது 50 சதவீத மானி யத்தில் விதைகள், திரு மானூரில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு வினியோ கம் செய்யப்பட்டு வரு கிறது. நெல் மற்றும் மக்காச் சோளம் அறுவடைக்குப் பின்பு விவசாயிகளின் விருப் பத்திற்கு ஏற்ப கம்பு, உளுந்து, எள், பருத்தி ஆகிய பயிர்களில் ஏதா வது ஒன்றை தேர்வு செய்து சாகுபடி செய்து பயனடை யும்படி திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எழில் ராணி மற்றும் அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலையா விவசாயிகளுக்கு அறி வுறுத்தியுள்ளனர்.
எண்ணெய் ஆலையில் தீ விபத்து
விருதுநகர், பிப்.1- விருதுநகர் அருகே முந்திரி எண்ணெய் தயா ரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகர் அருகே உள்ளது இனாம் ரெட்டியபட்டி. இங்கு முத்து ராமன்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவ ருக்குச் சொந்தமான முந்திரி எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது. இநிநிலையில், காலை 6 மணிக்கு வழக்கம் போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தார் களாம். அப்போது இயந்தி ரத்தில் இருந்த எண்ணெய் கீழே சிந்தியதில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படு கிறது. தீயணைப்புத்துறை யினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக் குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொ ருட்கள் தீயில் எரிந்து நாச மாகின.