திருச்சிராப்பள்ளி, ஏப்.9- இந்தியா கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என். அருண்நேருவை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மாவட்டம் தா. பேட்டை கடைவீதியில் தெரு முனைப் பிரச்சாரம் நடை பெற்றது. பிரச்சாரத்திற்கு ஒன்றி யக் குழு உறுப்பினர் சேகர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், ஒன்றியக் குழு, மாவட்ட குழு உறுப்பி னர்கள், ஒன்றியச் செய லாளர் பாண்டியன் ஆகி யோர் பேசினர். கிளைச் செய லாளர் ரங்கராஜ் நன்றி கூறி னார். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டன. மண்ணச்சநல்லூர் சிபிஎம் சார்பில் மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு ரோடு அருகே நடந்த தெருமுனைப் பிரச்சா ரத்திற்கு மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியச் செயலா ளர் மனோகரன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் பூமாலை, மூத்த தோழர் முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வம், பேரூராட்சி தலைவர் சிவ குமார் ஆகியோர் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் ஆனைமுத்து நன்றி கூறி னார். பிரச்சாரத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட னர்.