districts

img

பெரம்பலூர் வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.10 - ‘இந்தியா’ கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்  கே.என். அருண்நேருவை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மாவட்டம் திருவெள்ளறை கடை வீதியில் செவ்வாயன்று தெருமுனைப் பிரச்சாரம் நடந்தது. பிரச்சாரத்திற்கு மூத்த தோழர் முருகே சன் தலைமை வகித்தார்.  புறநகர் மாவட்டச்  செயலாளர் எம்.ஜெயசீலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பூமாலை, ஆனைமுத்து, ஒன்றியச் செயலாளர் மனோகரன், ஒன்றிய  குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, நல்லையன்  7 ஆவது வார்டு திமுக கிளை செயலாளர் பால சுப்பிரமணி ஆகியோர் பேசினர். விசிக திரு வெள்ளறை கிளைச் செயலாளர் குணசேக ரன் நன்றி கூறினார். திமுக, காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பாப்பாபட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாப்பாபட்டி கிராமத்தில் ஒன்றியக்  குழு உறுப்பினர்  முருகேசன் தலைமை யில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது. பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பாண்டி யன், மாவட்ட குழு உறுப்பினர் பாலகுமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள், திமுக மேற்கு  ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் பேசினர்.