மயிலாடுதுறை, ஜன.18- மயிலாடுதுறை மாவட் டம் ஆக்கூர் அருகேயுள்ள முக்கரும்பூர் தென்பாதி கிரா மத்தை சேர்ந்த உயரம் தடைபட்ட வயதான முதிய வரான அமிர்தலிங்கத்திற்கு சிறிய கடை ஒன்றை அமைத் துக்கொள்ள ஆக்கூர் இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி 75 ஆயி ரம் ரூபாய் கடனுதவி வழங்கி யுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனார் கோவில் ஒன்றியச் செயலா ளர் கே.பி.மார்க்ஸ், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங் கத்தின் தொடர் முயற்சியை தொடர்ந்து கடன் உதவிக் கான காசோலையை வங்கி யின் மேலாளர் ரத்தீஷ் ஆர். நாயர், துணை மேலாளர் முரு கேசன் ஆகியோர் அமிர்த லிங்கத்திடம் வழங்கினர். நிகழ்ச்சியின் போது சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் உடனிருந்தார்.