தஞ்சாவூர், ஜூலை.11 - சேதுபாவாசத்திரம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் பலியானார். தஞ்சாவூர் மாவட்டம், சேதுபா வாசத்திரம் காவல் சரகத்திற்குட் பட்ட, சுப்பம்மாள்சத்திரம் பகுதி யைச் சேர்ந்தவர் முகமது அலி மகன் கஜினி முகமது (வயது 55) மீனவர், இவர் தனக்கு சொந்தமான நாட்டுப் படகில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகன் காமராஜ் (30) என்பவருடன் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். இப்பகுதியில் கடந்த மூன்று தினங்களாக கடலுக்குள் கடும் சூறைக்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் மீனவர் கஜினி முகமது சென்ற நாட்டுப் படகு சூறை க்காற்றின் வேகத்தால் கடலுக்குள் கவிழ்ந்தது. மீனவர்கள் இருவரும் கடலுக்குள் தவறி விழுந்தனர். இதில் மீனவர் காமராஜ் மட்டும் நீந்திச் சென்று, அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களின் படகில் சென்று சேர்ந்தார். பின்னர் மீனவர்கள் வந்து பார்த்த போது, கவிழ்ந்து கிடந்த படகில் இருந்த கஜினி முகமதுவை காணவில்லை. இது குறித்து, புதன்கிழமை இரவு 11 மணியளவில் கரை திரும்பிய மீனவர்கள் மீன்வளத் துறை, கடலோர காவல் படை, வரு வாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், வியாழக்கிழமை காலை கட லுக்குள் சென்று அலுவலர்கள் பார்வையிட்டு காணாமல் போன மீனவரைத் தேடினர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டினம் கடல் பகுதியில் மீனவர்கள் வலை யில் சிக்கி உயிரிழந்த நிலையில், மீனவர் கஜினி முகமது உடல் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக பேராவூரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இறந்த மீனவர் கஜினி முகமது க்கு பரிதா (45) என்ற மனைவியும், திருமணம் ஆன 3 மகள்களும் உள்ளனர். இச்சம்பவம் குறித்து சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் குழும ஆய்வாளர் மஞ்சுளா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிபிஎம் அஞ்சலி கடலில் தவறி விழுந்து இறந்து போன மீனவர் கஜினி முகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுப்பம்மாள்சத்திரம் கிளை உறுப்பி னர் ஆவார். தகவல் அறிந்த கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், சேதுபாவாசத்தி ரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி, மூத்த தோழர் வீ.கருப்பையா உள்ளிட்ட கட்சித் தோழர்கள், பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சென்று அவ ரது உடற்கூராய்வு விரைந்து நடைபெற முயற்சி மேற்கொண்ட னர். அதனைத் தொடர்ந்து அவரது உடலை பெற்றுச் சென்று சுப்பம் மாள்சத்திரம் அவரது இல்லத்தில் சிறிது நேரம் வைத்திருந்த பிறகு நல்லடக்கம் நடைபெற்றது. நிவாரணம் கடலில் தவறி விழுந்து இறந்த மீனவர் கஜினி முகமது குடும்பத்தி ற்கு, தமிழக அரசு, மீன்வளத் துறை ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.