districts

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு முடிவுகள் விளக்க பேரவை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல் மற்றும் அகில இந்திய மாநாட்டு முடிவுகள் விளக்க பேரவை திருச்சி பெல் சிஐடியு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தாலுகா செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார். உறுப்பினர் அட்டைகளை மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முருகேசன், தெய்வநீதி மற்றும் கிளைச் செயலாளர்கள், தாலுகா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.