அறந்தாங்கி, பிப்.14- கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல், 6 வரை நடைபெற இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தீவிர நிதி வசூல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக வெள்ளி அன்று அறந்தாங்கியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமாகிய எம். சின்னதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கவிவர்மன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. தங்கராஜ், தென்றல் கருப்பையா, ஒன்றியச் செயலாளர் எம். நாராயண மூர்த்தி ஆகியோர், நகரில் அனைத்து தரப்பு மக்களிடமும் நிதி வசூல் செய்தனர்.