districts

img

அருமலைக்கோட்டை முதியவர் கொலை: கொலையாளிகளை கைது செய்யக் கோரி மருத்துவமனை முன்பு கிராம மக்கள் போராட்டம்

தஞ்சாவூர், ஜன.22 -  தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த கொலை சம்பவத்தில் தொடர்பு டைய மற்றவர்களையும் கைது செய்யக் கோரி  மருத்துவமனை முன்பு கிராம மக்கள்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் அருகே அரு மலைக்கோட்டை ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் கே.அரு ணாசலம் (60). இவர் சில நாட்க ளுக்கு முன்பு அப்பகுதியிலுள்ள வயல் வரப்பில் ஆடு, மாடுகளை மேய விட்டார். இதுதொடர்பாக அருணாசலத்துக்கும், அதே ஊரிலுள்ள வேறொரு தெருவைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை ஆடுகளுக்கு புல் அறுப்ப தற்காக அருணாசலம் சைக்கிளில் அருமலைக்கோட்டை வடசேரி வாய்க்கால் மேல பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப் போது, இவரிடம் ஆடு மேய்ப்பது தொடர்பாக எதிரே பைக்கில் வந்த இளங்கோவன் மகன் விவேக் (28) தகராறில் ஈடுபட்டார்.  அப்போது, விவேக் தன் கையில் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து, அருணாசலத்தின் கையில் அடித்து உடைத்து, அவரது தொண்டையில் குத்தினார். இதனால், பலத்த காயமடைந்த அருணாசலம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப் பதி ந்து விவேக்கை கைது செய்தனர். இந்நிலையில், இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய மற்ற வர்களையும் கைது செய்ய வேண்டும். அருணாசலத்தின் மக னுக்கு அரசு வேலை மற்றும் நிவார ணம் ரூ. 15 லட்சம் வழங்க வேண்டும். அருமலைக்கோட்டை பகுதியிலுள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் ஆகிய கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி யும், அதுவரை சடலத்தைத் வாங்க மறுத்தும் கிராம மக்கள் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை நான்காவது வாயில் முன்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கோ. அபிமன்னன், மாவட்டப் பொருளாளர் ப.சத்தியநாதன், சிபிஎம் நிர்வாகிகள் கரிகாலன், வெங்கடேசன், சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்டச் செயலர் ச. தமிழன், அரு.சீர். தங்கராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிவாரணம் வழங்க அதிகாரிகள் உறுதி இவர்களிடம் தஞ்சாவூர் கோட் டாட்சியர் செ. இலக்கியா, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் இரா. சோமசுந்தரம், க.முருக வேல், ஆய்வாளர் வி.சந்திரா உள் ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, அரசாணைப்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகம் மூலம் தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து வகையான பணப் பலன்கள், இறந்தவரின் வாரிசு கள் உரிய ஆவணங்களை சமர்ப்பி த்து அனைத்து நிவாரணங்கள் பெற லாம் என்றும், மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து அத்துறை அலுவலரிடம் கலந்தா லோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதிய ளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். முன்னதாக உயிரிழந்தவர் உடலை உடற்கூராய்வுக்கு தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும், காவல்துறை உரிய நட வடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், கே.பக்கிரிசாமி,மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.நம்பிராஜன், சிபிஎம் அம்மாபேட்டை ஒன்றியச் செய லாளர் வி.ரவி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் உ.சரவணன் ஆகியோர் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு சென்று துரித முயற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.