districts

img

கேக்கில் நூல் நூலாக ஊர்ந்த புழுக்கள்

மயிலாடுதுறை, செப்.27- பிறந்த நாளுக்கு வாங்கிய கேக்கில் புழுக்கள்  ஊர்ந்ததால், அதிர்ச்சியடைந்த தம்பதி இச்சம்ப வத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம்,  நாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலமுரு கன்- ஷோபனா தம்பதி.  இவர்களின் மகன் பூபதியின் 8 ஆவது பிறந்த நாளையொட்டி, கடந்த செப்.23 அன்று  மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள  பிரபல பேக்கரியில் (ஐயங்கார்) ரெட் மில்ஸ்  பிரஷ் கேக்கை ரூ.900 கொடுத்து வாங்கிச் சென்றுள்ளனர். மாலை 6 மணியளவில் கேக்கை வாங்கிவிட்டு  7.30 மணியளவில் வீட்டிற் குச் சென்று பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அப்போது குழந்தைகளுக்கு கேக்கை  வெட்டி கொடுத்த போது, அதில் புழுக்கள்  ஊர்ந்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த னர். கேக்கை வெட்டிய போது, அதில் நூல்  போல் புழுக்கள் நெளிந்தது குறித்து உடனே  தொலைபேசி மூலம், பேக்கரிக்கு புகார் தெரி வித்துள்ளனர். அதற்கு, நாளை கடைக்கு நேரில்  வருமாறு பேக்கரி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பின்னர் தம்பதியினர் மறுநாள் கடைக்குச் சென்று இதுகுறித்து கேட்டபோது கேக்கிற்கான தொகையை (ரூ.900) திருப்பி அளிப்பதாக கடையில் உள்ளவர்கள் தெரிவித் துள்ளனர்.  மேலும், பேக்கரியின் தரப்பில் இந்த சம்பவத் திற்கு எந்தவொரு விளக்கமும் அளிக்காததால்  அதிருப்தியடைந்த இவர்கள், தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டம் ஊராட்சியில் அரசு  நிகழ்ச்சிக்காக செவ்வாயன்று வந்திருந்த  மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை யிடம் புகார் மனு அளித்தனர். அதில், ‘உரிய ஆய்வு மேற்கொண்டு கடைக்கு சீல் வைத்து, தகாத வார்த்தைகளால் பேசிய ஊழியர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை  விடுத்தனர்.  மனு மற்றும் வீடியோ ஆதாரத்தை பெற்றுக்  கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது உறுதியளித் தார். இச்சம்பவம் குறித்த வீடியோ இணையத் தில் வேகமாக பகிரப்பட்டு மயிலாடுதுறை பகுதி களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.