districts

img

நலவாரிய பதிவுகளை சரி செய்ய வேண்டும் - முறைசாரா தொழிலாளர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 16- அழிந்து போனதாக சொல்லப்படும் 72 லட்சம் நலவாரிய உறுப்பினர்களின் தரவுகளை மீட்டெடுத்து நலவாரிய குளறு படிகளை சீர் செய்ய வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு முறைசாரா தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது

நேரடி பதிவை அனுமதிக்க வேண்டும். ஓ.டி.பி கேட்கும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். பணப்பயன்களை இரட்டிப்பாக்கி, விண்ணப்பித்தவுடன் பணப்பயன்களை வழங்க வேண்டும். பதிவு, புதுப்பித்தல், பென்சன் உட்பட பணப்பயன்கள் வழங்குவதில் ஓராண்டு காலமாக தாமதம் நீடிக்கிறது. தமிழக அரசு முறைசாரா தொழிலாளர்களின் பிரச்சனையில் அலட்சியம் காட்டாமல்  உடனடியாக தலையிட்டு பிரச்சனை களுக்கு தீர்வு காண வேண்டும். அனைத்து நலவாரிய, கண்காணிப்பு குழு கூட்டங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்த வேண்டும். பணப்பயன்களுக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொருமுறையும் அனைத்து ஆவ ணங்களை கேட்பதை கைவிட வேண்டும்.  திருச்சி நலவாரியத்தில் 400-க்கும் மேற்பட்ட நபர்கள் போலியான தொழிற் சங்கங்களை உருவாக்கி கையெழுத்திடு வதை அனுமதிக்கக் கூடாது.

கட்டுமான நலவாரிய உறுப்பினர் களுக்கு வழங்கும் அனைத்து பணப் பயன்களையும் இதர நலவாரிய உறுப்பி னர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

இதனொரு பகுதியாக திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

திருச்சி நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு  மாநகர் மாவட்ட த்தலைவர் சீனிவாசன்  தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ரெங்கரா ஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவ ராஜன், மாவட்ட தலைவர் சம்பத், ஆட்டோ சங்க மணிகண்டன், சுமைப்பணி சங்க சிவகுமார், தரைக்கடை சங்க செல்வி, சாலை போக்குவரத்து சங்க சந்திரன், கட்டுமான சங்க சந்திரசேகர், தையல் சங்க பிரமிளா ஆகியோர் பேசினர். 

தஞ்சாவூர்

தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால் தலைமை வகித்தார். முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்கள் கே. அன்பு, சா.செங்குட்டுவன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ். மூர்த்தி, மாவட்டத் தலைவர் சின்னை யன், டாஸ்மாக் சங்க மாவட்டச் செய லாளர் க.வீரையன், மாவட்டத் தலைவர்  க.மதியழகன், தரைக்கடை சங்க மாவட்டத்  தலைவர் மணிமாறன், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் த.முருகேசன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், டிஆர்இயூ துணைச் செயலாளர் ரஜினி, ஆட்டோ சங்க நிர்வாகிகள் செல்வம், சுரேஷ் உட்பட திரளான அமைப்புசாரா தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு தலைமை  வகித்தார். மாவட்டத் தலைவர் கே.முகமத லிஜின்னா தொடக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் நிறைவுரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி  மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிர மணியன் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

திருவாரூர்

திருவாரூர் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பாக சிஐடியு மாவட்ட  குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். ஹனிபா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகை யன் கோரிக்கையை வலியுறுத்தி உரை யாற்றினார். முன்னதாக திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து தொழிலா ளர்கள் பேரணியாக புறப்பட்டு தொழிலா ளர் நல வாரிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். 

கரூர்

கரூர் மாவட்டம் வெண்ணமலை தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எம். சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, மாவட்டத் தலைவர் ப.சரவணன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல செயலாளர் கா.தனபால், தையல் சங்கம்  ஆர்.ஹோச்சுமின், மாவட்ட குழு உறுப்பி னர் கே.வி.கணேசன், சிஐடியு துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன், டாஸ்மாக் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.