districts

img

சடலத்தை மயானத்திற்கு எடுத்து செல்ல வழி இல்லை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேதாரண்யம், ஜன. 24 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யத்தை அடுத்த தலைஞாயிறு ஒன்றியம் காடந்சேத்தி ஊராட்சி பாரதிநகரில் சுமார்  150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஞாயி றன்று அதே பகுதியை சேர்ந்த கிளி அம்மாள் (70) வயது மூப்பு காரணமாக கால மானார். அவரது உடலை மயான கரைக்கு கொண்டு செல்வதற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் எந்த ஒரு சாலை வசதியும் கிடை யாது. இறந்த கிளி அம்மாள் உடலை பாரதி  நகரில் இருந்து நெல் சாகுபடி வயல் வழி யாக மயானக் கரைக்கு கொண்டு செல்ல  முற்பட்டனர். நெல் சாகுபடி வயல் வழியாக  உடலை கொண்டு செல்லக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில், ஒற்றை யடி பாதை வழியாக கிளி அம்மாள் உடல்  மயான கரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பாரதி நகரில்  இருந்து மயான கரைக்கு செல்ல சாலை  வசதி அமைத்துத் தர வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.