districts

கொரோனா பெருந்தொற்றும் தொழிலில் தாக்கமும் - கருத்தரங்கம்

கும்பகோணம், ஏப்.21 - தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்  நிதியுதவியுடன் கும்பகோணம் அரசினர்  கலைக் கல்லூரி (தன்னாட்சி)  பொருளியல்  துறை சார்பாக கோவிட் – 19 பெருந்தொற் றால் இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர  தொழிலின் தாக்கம் பற்றி ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்க துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் க.துரையரசன் தலைமை  உரையாற்றினார். பொருளியல் துறைத்தலை வர் முனைவர் ச.ராஜராஜன் வரவேற்றார். முனைவர் ஆ.தாமஸ் டேவிட் கருத்தரங்க விளக்கவுரை அளித்தார். மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ரெ.ராஜேந்திரன் தொடக்கவுரை நிகழ்த்தினார். அண்ணாமலை பல்கலைக் கழகப் பொருளியல் துறை பேராசிரியர் ஜி.ரவி சிறப்புரையில் கருத்தரங்கத்தின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். பொருளியல் துறை பேரா.வெ.பாஸ்கர் நன்றி கூறினார். கருத்தரங்க கட்டுரைகளை பாண்டிச்சேரி இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் எஸ்.சரவ ணன் தொகுத்து வழங்கினார். நிறைவு விழா வில் நாகப்பட்டினம் ஏ.டி.எம். கல்லூரி பொரு ளியல் துறை பேராசிரியர் வி.விஜி மாணவர் களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கருத்த ரங்க ஒருங்கிணைப்பாளர் த.தமிழ்வாணன் நன்றி கூறினார்.