கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் அமராவதி ஆறு மாசுபடுவதை குறைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுக்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலர் ஜெயலெட்சுமி, கரூர் மாநகராட்சிப் பொறியாளர் நக்கீரன், தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.