திருச்சிராப்பள்ளி, மே 20-
மருந்துகள் சந்தை படுத்துதல் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருண் பிரசாத் தலைமையில் திருச்சியில் நடை பெற்றது. கூட்டத்தினை எல்.மகாதேவன் துவக்கி வைத்தார்.
வருங்காலம் வண்ணமயமாகும் என்ற தலைப்பில் கே.வி.முருகபாரதி பேசி னார். கூட்டத்தில் மாநில தலைவராக ஜே. வேங்கடசுந்தரம், மாநில பொதுச் செயலா ளராக எம்.ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.
கூட்டத்தில் மருந்துகளின் விலையை உற்பத்தி செய்யும் மூலப்பொருள்களில் நிர்ணயம் செய்து இதன் மூலம் மருந்து களின் விலையை கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும்.உயிர்காக்கும் மருந்துத் துறை என்பதால் அனைத்து மருந்து களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கக் கூடாது.
மருந்து துறை சுயசார்பு அடைய மூலப் பொருள் உற்பத்தியை ஊக்குவித்து, வெளிநாட்டிலிருந்து வாங்கு நிலையை தவிர்க்க வேண்டும். சிப்மா உறுப்பினர்களுக் கான மருந்து சந்தைப்படுத்ததலுக்கான தனி உரிமம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநிலத் தலைவர் பி.அருண் பிரசாந்த், மாநிலப் பொருளாளர் எம்.பன்னீர் செல்வம், வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் பி.சரவணன், ஏ. கருணைக்கடல், சி.கோபி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.