அரியலூர், மே 7 -
\ அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் சம்பா அறுவடைக்கு பிந்திய பட்டமாக எண்ணெய் வித்து மற்றும் பயறு வகை பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தா.பழூர் ஒன்றியத்தில் தென்கச்சி பெருமாள் நத்தம், கீழக்குடி காடு, அடிக்காமலை, கோட்டியால், மூர்த்தியான், பனையடி, இடங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் சுமார் 500 ஏக்க ரில் எள் சாகுபடி செய்யப் பட்டுள்ளது.
தற்போது பூக்கும் தரு வாயில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரு கிறது. இதனால் எள் வயல்க ளில் தண்ணீர் தேங்கி பயிர்களின் வேர் அழுகி வீணாகி வருகிறது.
இதனால் எள் சாகுபடி செய்த விவசாயிக கவலை யில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசும் மாவட்ட நிர்வாக மும் பாதிக்கப்பட்ட வயல் களை கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.