districts

img

கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு நிலத்தை சொந்தமாக்கிடுக- குத்தகை விவசாயிகளை வெளியேற்றாதே!

மயிலாடுதுறை, அக்.16-  பல தலைமுறைகளாக கோவில் நிலங்களில் குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு அரசு தீர்மானிக்கும் நியாயமான விலை யின் அடிப்படையில் அவர்களுக்கே  வழங்கிட வேண்டும்.  சிறுகடைகள் கட்டி பயன்படுத்தி வருபவர்களை யும்  குத்தகை சாகுபடி செய்யும் விவ சாயிகளை பொதுஏலம் என்ற பெய ரில் நிலத்திலிருந்து வெளியேற்றுவ தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அடி மனை பயனாளிகள்- குத்தகை விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அக்டோபர் 16 திங்களன்று இந்து சமய அறநிலையத்துறை அலுவல கங்கள் முன்பு மாநிலம் தழுவிய தொடர் முழக்கப் போராட்டம் நடை பெற்றது. மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் உள்ள இந்துசமய அற நிலையத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் த.இராயர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள்  சங்க மாவட்ட தலைவர் டி.சிம்சன், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய், மாநிலக்குழு உறுப்பினர் பி.குணசுந்தரி, மாவட்ட பொருளா ளர் இயற்கை விவசாயி அ.ராம லிங்கம்,  அவையாம்பாள்புரம் குடி யிருப்போர் நலச்சங்கத்தின் தலை வர் டி.கணேசன் உள்ளிட்டோர்  பேசினர். உரையாற்றினர். தரங்கம் பாடி, சீர்காழி,கொள்ளிடம், செம்பனார்கோவில்,குத்தாலம்,மயிலாடுதுறை ஆகிய ஒன்றிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.  நாகப்பட்டினம்   நாகப்பட்டினத்தில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் எதிரில் மாவட்டத் தலைவர் எஸ். கணபதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கோவை.  சுப்பிரமணியன். மாவட்ட பொரு ளாளர் பொன்.மணி மற்றும் சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர். 

திருச்சிராப்பள்ளி 

திருச்சி திருவானைக்காவலில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவல கம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் கே.சி.பாண்டியன், புறநகர் மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் போராட் டம் நடைபெற்றது. விவசாயி கள் சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி, புறநகர் மாவட்ட செய லாளர் நடராஜன், மாவட்ட தலைவர் சிதம்பரம், மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசமூர்த்தி, சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலா ளர் தர்மா ஆகியோர் பேசினர். திருவாரூர்  திருவாரூர் இந்து அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு மாவட்டச் செய லாளர் ஜி.துரைராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஜெயராமன். மாவட்டத் தலை வர் கே.தமிழ்ச்செல்வி, மாவட்ட பொருளாளர் எம்.முத்துகிருஷ் ணன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சேகர், துணைத்தலைவர் எஸ். சாமிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். 

தஞ்சாவூர்  

தஞ்சாவூர் இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டச் செய லாளர் எம்.ராம் தலைமை வகித் தார். விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்ட பொருளாளர் எம்.பழனி அய்யா ஆகியோர் பேசினர்.  இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.