districts

img

பெரம்பலூரில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், நவ.9 - பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை  சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி சனிக் கிழமை நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நுகர்வோர் பயன்பாடு குறித்தும், தரமான பொருட்கள், சரியான எடை  அளவு, கலப்படமற்ற பொருட்கள் வாங்குவது குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் நடைபெற்ற இப்பேர ணியில், பெரம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளி,  தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளி, புனித தோமினிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  பெரம்பலூர் பாலக்கரை பகுதி யில் தொடங்கிய இப்பேரணி, சங்கு பேட்டை வழியாக பெரம்பலூர் வட்டாட் சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் ச.சுந்தரராமன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர்கள், நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும்  பலர் கலந்து கொண்டனர்.