கட்டுமான தொழிலாளர் சங்கம் கிளை கூட்டம்
அரியலூர், அக்.25 - அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டுமானத் தொழிலாளர் சங்கம் கிளை கூட்டம் கே.பூமா தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செய லாளர் பி.துரைசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உழைக்கும் பெண்கள் குறித்தும், உறுப்பினர் பதிவு குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.
ஆசிரியர்களுக்குப் பயிற்சி
அறந்தாங்கி, அக்.25- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்பிக்கிற ஆசிரியர்களுக்கு பாடவாரி யாக பயிற்சி அளிக்கப்பட்டது. மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா னந்தம் தலைமை வகித்தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்திற்கு வினாக்கள் தயாரிப்பு, சிறுவர் இதழ் தயாரிப்பு, தேன்சிட்டு இதழ் வாசித்தல் மற்றும் வாசிப்பு இயக்கம் தொடர்பான கருத்துகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் பாடவாரியாக ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கல்
திருவாரூர், அக்.25 - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் திருவாரூர் மாவட்டம், புலிவலம் ஊராட்சியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 11 வகையான சீர்வரிசைப் பொருட்களை வழங்கி னார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலை வாணன் முன்னிலை வகித்தார். திருவாரூர் ஒன்றியக் குழுத் தலைவர் தேவா, ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் மு.வேத நாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) லதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சையில் அக்.31-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், அக்.25- தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அக்.31 (செவ்வாய்) அன்று காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங் கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண் மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரி விக்கலாம். குறைதீர் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க விரும்பும் விவ சாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்ய வேண்டும். விவ சாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னர் மனுக்களை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
\பல் பரிசோதனை முகாம்
பாபநாசம், அக்.25 - அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பல் பரிசோதனை, வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடந் தது. முகாமை கிளப் முன்னாள் தலைவர்கள் கோதண்டராமன், திலகர் தொடங்கி வைத்தனர். இதில் 70-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப் பட்டன. தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் சங்கர், உதவி ஆளுநர் வெங்கடேசன், முன்னாள் உதவி ஆளு நர் காதர்பாட்சா உள்ளிட்ட ரோட்டரி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நவ.15-க்குள் பயிர்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, அக்.25 - விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 15.11.2023-க்குள் ரூ.513 பிரிமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா அறிவுறுத்தி உள்ளார். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா பேசுகையில், “மாவட்டத்தில் தற்போது யூரியா 4598 மெ.டன்னும், டிஏபி 1596 மெ.டன்னும், பொட்டாஷ் 1476 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 5667 மெ. டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறு வனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கத்தில் மட்டும் 878 மெ.டன் யூரியா, 633 மெ.டன் டிஏபி, 470 மெ.டன் பொட்டாஷ், 866 மெ.டன் காம்ப் ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏக்கருக்கு விவசாயிகள் பிரீமியம் தொகையாக ரூ.513 செலுத்தி, நவம்பர் 15-க்குள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 2017-18 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தோட்டக் கலை துறை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் மொத்தம் 22,206 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. உழவன் செயலி மூலம் கூடுத லாக விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரம் இருப்பு விவரம், மானியத் திட்டங்கள், உதவி வேளாண்மை அலு வலர் வருகை குறித்த தகவல், வானிலைச் செய்திகள், பயிர்க் காப்பீட்டு விவரங்கள் உள்ளிட்ட 24 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.
உயரம் வளர்ச்சி தடைபட்டவர்களை கடும் ஊனமுற்றவர்களாக கருதி சிறப்புத் திட்டம் கொண்டு வர கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, அக்.25 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று மனு ஒன்றை கொடுத்தார். அம்மனுவில், ஆண்டுதோறும் அக்டோபர் 25 அன்று உலக உயரம் வளர்ச்சி தடைபட்டோர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு உயரம் வளர்ச்சி தடைபட்டவர்களை கேலி, கிண்டல் செய்யும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொது வெளியில் நடைபெறுவதை தடுக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும். அரசின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த வேண்டும். உயரம் வளர்ச்சி தடைபட்டவர்களை கடும் ஊனமுற்றவர்களாக கருதி சிறப்புத் திட்டங்களை கொண்டு வர வேண்டும். குறிப்பாக அவர்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் வீடுகள் கட்டித் தருவதற்கு அரசு கவனம் செலுத்த வேண்டும். போக்குவரத்தில் தாழ்தள வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள கழிவறைகளிலும், பொதுக் கழிவறைகளிலும் அவர்களுக்கு ஏற்ற தாழ்ப்பாள்களை அமைக்க வேண்டும். மின் இணைப்பு போர்டுகள், எளிதாக பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என கூறியிருந்தார். மனுவை அதிகாரியிடம் கொடுத்த போது, சங்க நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, நெடுஞ்செழியன், கார்த்தி, அறிவழகன், மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
தனியார் பள்ளி விடுதியில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
பெரம்பலூர், அக்.25- பெரம்பலூர் துறையூர் சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே தனலட்சுமி மெட்ரிகுலே சன் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் பின்புறம் உள்ள பெண்கள் விடுதியில் அக்.24 அன்று இளம்பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். அன்றைய தினம் பிற்பகல் ஒரு மணிய ளவில், பள்ளியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் விஜய லட்சுமி, விடுதியை சுத்தம் செய்வதற்காக கதவை திறந்த போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரி வித்தார். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் இறந்த பெண் ணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த பெண் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த பெயர் சுபா ஆடலரசி (26) என்றும், இவரது தந்தை பெயர் திருவள்ளுவன் என்றும் தெரிய வந்தது. இவர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிகுலேசன் பள்ளியில், கடந்த ஒரு வருடமாக அலுவலக உதவியாளராக பணியாற்றிக் கொண்டு, அங்குள்ள பெண்கள் விடுதியில் காப்பாளராகவும் வேலை செய்து அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த அக்.16 அன்று, தனது அண்ண னின் திருமணத்தை முன்னிட்டு விடுமுறை எடுத்து ஊருக்குச் சென்றுள்ளார். பின்பு, பள்ளியில் ஆயுதபூஜை கொண்டாட வேண்டும் என வீட்டில் கூறிவிட்டு அக்.23 அன்று பள்ளிக்கு வந்துள்ளார். அக்.24 அன்று இவருடன் பணி செய்ப வர்கள் இவரை 11.30 மணிக்கு பார்த்துள்ளனர். அதன் பின்பு யாரும் பார்க்கவில்லை. பின்னர், பகல் ஒரு மணியளவில் பள்ளியில் பணிபுரி யும் துப்புரவு பணியாளர் விஜயலட்சுமி, விடுதியை சுத்தம் செய்வதற்காக கதவை திறந்து பார்த்த போது, சுபா ஆடலரசி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். மேலும், “தான் தீராத மன உளைச்சல் காரணமாகவும், உடல் நிலை சரியில்லாததாலும் நான் இந்த முடிவை எடுத்துள் ளேன். இதற்கு வேறு எவரும் காரணம் அல்ல” என பேப்பரில் எழுதி கையொப்பமிட்டு 23.10.23 என தேதியை குறித்து வைத்துள்ளார் சுபா ஆடலரசி. இதுகுறித்த தொடர் விசாரணையில், அவரது உறவுக்கார ரான அன்பின் பொன்மொழி என்பவரை காதலித்து வந்ததும், அவருக்கு தற்போது வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளதும் தெரிய வந்தது.
திருமணமான 2 மாதத்தில் பெண் மர்மச் சாவு: உறவினர்கள் மறியல்
தஞ்சாவூர், அக்.25 - தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள மேலத் திருப்பூந்துருத்தி அற்புத மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் விவேக் (35). சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவருக்கும், தஞ்சாவூர் கரந்தை சருக்கை சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்த மார்த்தாள் மேரிக்கும் (29) இந்தாண்டு ஆக.20 அன்று திருமணம் நடைபெற்றது. அடுத்த சில நாள்களில் தாய் வீட்டுக்கு வந்த மார்த்தாள் மேரி அங்கேயே தங்கிவிட்டார். இந்நிலையில், அக்.22 அன்று மார்த்தாள் மேரியை உறவினர்கள் அழைத்துச் சென்று கண வர் வீட்டில் விட்டனர். இதைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை மார்த்தாள் மேரிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, அவரை விவேக் திருவையாறு அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மார்த்தாள் மேரியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார். இதுகுறித்து, நடுக்காவேரி காவல் நிலையத்தில் மார்த்தாள் மேரியின் பெற்றோர் அளித்த புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மார்த்தாள் மேரி யின் உடலைக் கைப்பற்றி, திருவையாறு மருத்துவமனை யில் உடற்கூறாய்வு செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால், திருவையாறு மருத்துவமனையில் விவேக்குக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளதால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என மார்த்தாள் மேரியின் உறவினர்கள் வலியுறுத்தினர். இதன்படி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு மார்த்தாள் மேரியின் உடல் கொண்டு செல்லப்பட்ட போது, இடமில்லை எனக் கூறி அங்குள்ள ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த உறவினர்கள் கரந்தை சருக்கை பகுதியில் செவ்வாயன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் செ. இலக்கியா மற்றும் காவல்துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். உடற்கூறாய்வு முறைப்படி நடைபெறும் என கோட்டாட்சியர் உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், இதுகுறித்து கோட்டாட்சியர் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்.
குலசை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடி, அக். 25 குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் நாளான செவ்வாயன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனையொட்டி காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பா ளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு 11 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணி யளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன் பாக எழுந்தருளினார். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்க ணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தரு ளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரா தனை நடைபெற்றது. தசரா திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத் துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி அருகே கரை ஒதுங்கிய அரிய வகை பெருந்தலை ஆமை
தூத்துக்குடி, அக். 25 தூத்துக்குடியை அடுத்து உள்ள தருவைக்குளத்தில் கண்ணாடி இழை படகில் சுற்றுலா பயணிகள் கடல் பயணம் மன்னார்வளைகுடா உயிா்கோள காப்பக வனத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகமான சுற்றுலா பயணி கள் தினமும் இந்த படகில் சவாரி செய்து வருகின்றனர். படகு சவாரி நிறைவு பெற்ற பின், அந்த பகுதியில் இருந்து வனத் துறை பணியாளர் டிட்ரோஸ் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது கடலில் இருந்து அரிய வகை ஆமை ஒன்று கரை ஒதுங்கியதைப் பார்த்து உடனடியாக அவர் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். மன்னார் வளை குடா உயிர்கோள காப்பக வனத்துறையினர் ரேஞ்சர் ஜினோபி னோஸ் ஆலோசனையின் பேரில் பாரஸ்டர் மதன்குமார் ,வனக் காப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் “இவை தடை செய்யப்பட்ட அரிய வகை பெருந்தலை ஆமை. இதனை நாங்கள் கண்டதில்லை. இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது புதியபுத்தூர் கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடனடியாக அடக்கம் செய் யப்படும் என்றார். இந்த ஆமையை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.