districts

குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 4 - திருச்சி மாநகராட்சியில் காவிரி ஆறு மற்றும் கொள்ளி டம் ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு தினமும் 135 மில்லி யன் லிட்டர் பொதுமக்க ளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  கொள்ளிடம் ஆற்றிலி ருந்து வெல் எண் 3-இல் இருந்து பெறப்படும் குடிநீர் கோ-அபிஷேகபுரம் கோட்டப் பகுதியில் மண்டல  எண் 5-ல் அமைந்த 11 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட் டிகளுக்கு அனுப்பப்படு கிறது. இக்குடிநீரானது செந்நிறமாக இருப்பதால் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.  இதையடுத்து குடிநீர் வழங்கல் பொறியாளர்கள் மற்றும் நிபுணர்கள் ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட்டது.  அதன்படி காவிரிக்கரையில் கம்பரசம்பேட்டை, அய்யா ளம்மன் படித்துறை அருகில்  குடிநீரை சுத்திகரிப்பு செய் யும் நிலையம் அமைப்பதற் கான கட்டுமான பணிகள் ரூ.5  கோடி மதிப்பீட்டில் தொடங்கி  நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானப் பணி களை மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் சனிக்கிழமை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர் களுக்கு உத்தரவிட்டனர்.