districts

img

இந்திய அரசிலமைப்பு சட்ட தினம்

மயிலாடுதுறை டிச-12,   மயிலாடுதுறை மாவட்டம், பொறை யார் த.பே.மா.லு கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு சட்ட தின கருத்தரங்கு பேராசிரியர் சேவியர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.  வணிகவியல் துறை சார்பில் நடை பெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ் கலந்துக் கொண்டு அரசியல மைப்புச் சட்ட தின உறுதிமொழியை கூறி துவக்கிவைத்தார். எழுத்தாளர்களும், ஓய்வுப் பெற்ற பேராசிரியர்களுமான மரியலாசர், அரச.முருக பாண்டியன் ஆகியோர் இந்திய அரசியலமைப்பு குறித்து உரையாற்றினர். பேராசிரியர்கள் கணேசன், திலகர்,சித்ரா, ராபின்சன் அலெக்சாண்டர், ஈஸ்டர் அன்புராஜ், அனிதா, சிவா, ரேவதி மற்றும் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கருத்த ரங்கில் கலந்துக்கொண்டனர். பேரா சிரியர்‌ இளஞ்செழியன் நன்றி கூறினார்.