புதுக்கோட்டை,ஆக.29 புதுக்கோட்;டை மாவட்டம் சோத்துப் பாளை ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ பாய் 13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழக்கிழ மை திறந்து வைத்தார். கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை ஒன்றியம் சோத்துப்பாளை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ பாய் 13 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டி டத்தை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வியாழக்கிழமை திறந்து வைத்தார். புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலு, இந்திரா காந்தி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் மாதவன், ஊராட்சி மன்றத் தலைவர் முத்துசாமி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி, ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.