districts

img

திருவாரூர் மாவட்ட புத்தகத் திருவிழா நிறைவு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

திருவாரூர், பிப்.12 - திருவாரூர் மாவட்ட புத்தகத் திரு விழா நிறைவு நிகழ்ச்சியில், புத்தக திரு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் கள் வழங்கப்பட்டன. திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள எஸ்.எஸ்.நக ரில், திருவாரூர் புத்தக திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு  மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை வகித்தார்.  கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஊரக  வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்  சி.ப்ரியங்கா, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்  தலைவர் உ.மதிவாணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலை வாணன், மாவட்ட ஊராட்சித் தலை வர் கோ.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் சாருஸ்ரீ  பேசுகையில், “திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று இரண்டு  புத்தக திருவிழாக்களை நடத்தியது பெருமையாக உள்ளது. கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர் கள், பொதுமக்களை அதிகளவில் வாச கர்களாக உருவாக்குவதே இப்புத்தக  திருவிழாவின் மிக முக்கிய நோக்க மாகும். இப்புத்தகத் திருவிழாவானது பிப்.2 முதல் பிப்.11 வரை நடந்து நிறைவு  பெற்றுள்ளது. தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடை பெற்றன. இதில் மாணவர்கள் உற்சாகத் துடன் கலந்து கொண்டனர். தலை சிறந்த அறிஞர்களின் சொற்பொழிவு கள், கலைநிகழ்ச்சிகள், பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் லட்சக்கணக் கான புத்தகங்களுடன் சிறந்த புத்தக நிறுவனங்களும் இடம் பெற்றிருந்தன. இப்புத்தக திருவிழாவில் 34,087 புத்த கங்கள் விற்பனையாகியுள்ளன. மேலும், புத்தக திருவிழா நடைபெறு வதற்கு உறுதுணையாக இருந்த  அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் நன்றி” என்றார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு உயர் அலு வலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதி நிதிகள், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள், புத்தக வாசகர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.