districts

img

பூப்பந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு

பாபநாசம், டிச.18 - பாபநாசத்தை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் செல்வகுமாரன். இவரது  மகன் சிவபிரகதீஷ் (19). கோவை சரவணபட்டியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. மூன்றாம் ஆண்டு ஆட்டோ மொபைல் படித்து  வருகிறார்.  இவர் திருப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கம், சான்றிதழ் பெற் றார். இவருக்கான பாராட்டு விழாவை பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட், பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்தின. இதில்  பெனிபிட் பண்ட் தலைவர் ஆறு முகம் சிவபிரகதீஷை பாராட்டி அவ ருக்கு கேடயம் வழங்கினார். பாபநா சம் லயன்ஸ் கிளப் தலைவர் கணேசன், மாவட்டத் தலைவர் பழனியப்பன், முன்னாள் தலை வர்கள், பாபநாசம் பெனிபிட் பண்ட்  இயக்குநர்கள், ஊழியர்கள் பங் கேற்றனர்.